நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2006

முன்னுரை.
வணக்கம் நண்பர்களே...
ரொம்ப நாளாக பகிர்ந்து கொள்ளவேண்டிய விசயம் ஒன்று இருக்கிறது.
அது தான் நான் கலந்து கொண்ட "இந்தியா சுற்றும் மோட்டார் சைக்கிள் பயணம்."
(Hormony motorcycle rally)

அது பற்றி வெளியே பேசும்போது, இந்த அனுபத்தை எப்படியாவது எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பிறகு வேகம் வற்றி மறந்து விடும் ( அட யாருப்பா பேனா எடுத்து, பேப்பர் வாங்கி கை வலிக்க எழுதுறது?).
அப்புறம் ஒரு திடீர் ஞான உதயம், இப்படி எழுதி வைக்கலைனா அப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு மறந்து போய்டும், அப்புறம் ஒரு ராஜராஜ சோழன், அசோகர் (!!!!) மாதிரி என் புகழ் வெளியே தெரியா வேண்டாமா?
என் வருங்கால சந்ததியினர் என் பெருமையை தெரிந்து கொள்வது எப்படி??
அதனால, என் மோட்டர் சைக்கிள் பயண அனுபவத்தை எழுத முடிவு செஞ்சேன். (இருக்கவே இருக்கு கணிணி, அது மூலமா தட்டச்சு செய்வது எளிது.)எழுத ஆரம்பித்து விட்டேன். (இதை முழுசா முடிச்சா! நான் பெரிய ஆளுங்கோ!!)

மோட்டார் பயணத்துக்கு தயாரா???

1... 2...3... கிளம்புங்க.......

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு