நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2006

இது கதை அல்ல நிஜம்...

ஆனா ஆவன்னாவை ஆங்கிலத்தில் படித்து
இருபத்து ஒரு வயதில் பட்டம் வாங்கி,

எங்க ஊரில் வேலை இல்லை,
எனக்கொரு வேலை கொடு
என்றுஎப்படியாவது ஒரு visa வில்
எங்காவது ஒரு வேலை தேடி

அமெரிக்கனுக்கோ, அரபிக்கோஅடிபணிந்து
ஆயிரம் டாலர்வீட்டுக்கு அனுப்பி

ஊரில்ஒரு பெண்ணைஒரு மாத விடுப்பில்
உடனே திருமணம் செய்து
அவளை ஒரு வருடம்,உடன் இருத்தி
அம்மாவாக ஆக்கிவிட்டு
ஊருக்கு அனுப்பி வைத்து

வருடம் ஒருமுறை வீட்டுக்கு
வருகை பதிவு செய்துவாழும்
அவனை பார்த்துஅவன் குழந்தை கேட்டதாம்....

அம்மா இந்த அங்கிள் யாரு...
டாலருக்கும்,ரியாலுக்கும் நம்மை விற்றுவிட்டு
டாடா சுமோ வாங்கி என்ன பயன்....?

நேசத்தின் சுவாசத்தில்...
சரா...

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு