நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2006

இழந்த சுயம்.

அன்னிய உணவுண்டோம்,
ஆங்கிலேய உடையணிந்தோம்

அம்மாவை மம்மி என்றோம்
சும்மவே ஆங்கிலம் பேசினோம்

கலாச்சரத்தை கற்பழித்தோம்
கடன் வாங்கியாவது கான்வென்டில் சேர்த்தோம்

"தை" மறந்து ஜனவரிக்கு
"கை" குலுக்குகிறோம்.

குடியாண்ட மரபு மறந்து
குழைந்து கும்பிட்டு வாழ்கிறோம்.

காசு தரும் call center வேலையை.
கழுத்தில் டை கட்டிகௌரவமாக பார்கிறோம்

அமெரிக்க காரன் வாங்கிய அல்வா
இனித்ததா இல்லை புளித்ததா என்று
இந்தியாவில் இருந்து கவலை படுகிறோம்...

அன்னியன் போய் ஐம்பது வருடம் தாண்டியும்
அடிமை மோகம் தீர வில்லையே...

நேசத்தின் சுவாசத்தில்...சரா...

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

I appreciate your words, Your poem impacts me lot!
Karvendan

6:08 am  

Post a Comment

<< முகப்பு