இழந்த சுயம்.
அன்னிய உணவுண்டோம்,
ஆங்கிலேய உடையணிந்தோம்
அம்மாவை மம்மி என்றோம்
சும்மவே ஆங்கிலம் பேசினோம்
கலாச்சரத்தை கற்பழித்தோம்
கடன் வாங்கியாவது கான்வென்டில் சேர்த்தோம்
"தை" மறந்து ஜனவரிக்கு
"கை" குலுக்குகிறோம்.
குடியாண்ட மரபு மறந்து
குழைந்து கும்பிட்டு வாழ்கிறோம்.
காசு தரும் call center வேலையை.
கழுத்தில் டை கட்டிகௌரவமாக பார்கிறோம்
அமெரிக்க காரன் வாங்கிய அல்வா
இனித்ததா இல்லை புளித்ததா என்று
இந்தியாவில் இருந்து கவலை படுகிறோம்...
அன்னியன் போய் ஐம்பது வருடம் தாண்டியும்
அடிமை மோகம் தீர வில்லையே...
நேசத்தின் சுவாசத்தில்...சரா...
1 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
I appreciate your words, Your poem impacts me lot!
Karvendan
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯