நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2006

நான் கதை எழுதிய கதை...

எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு அரிப்பு. நாமலும் கதை எழுதுனா என்ன?

இந்த அரிப்பு ரணமாகி போறதுக்குள்ள கதை எழுதலாம் அப்படின்னு ஒரு குயர் A4 பேப்பர் வாங்கி, நல்லா மார்ஜின் போட்டுட்டு யோசிச்சேன்.

என்ன எழுதுறது?????????????????

டேய் சரா... முதல்ல பிள்ளையார் சுழி போடுடான்னு சொன்ன என்னுள் இருந்த ஆன்மீகவாதிக்கு ஒரு சபாஷ் சொன்னேன்.

பிள்ளையார் சுழி போட்டாச்சு...அப்புறம்...எத பத்தி கதை எழுதுறது ?????

முதல் முறையாய் கதை எழுதுற சாமி கதை எழுதுன்னு என் ஆன்மீகவாதி அறிவுறுத்தினான்...

ச்சி... அடங்கு என்று என் பெரியார் (அதாங்க பகுத்தறிவு) கண்டிச்சார் (கொஞ்சம் மரியாதை )

அறிவியல் சம்பந்த பட்ட கதை எழுத என் விஞ்ஞானி வலியுறுத்தினான்.

காதல் கதை எழுத சொல்லி என் ரோமியோ தூண்டினான்.

கடைசியில் என் சுய அறிவு முழிச்சுகிட்டு...

தம்பி... நேரமாச்சு தூங்கு நாளைக்கு ஆபிசு போனும்..இல்லை ஆப்புதான்னு சொல்லி மிரட்டியது...

கடைசியில் எதார்த்தம் வென்று என் கதை பிள்ளையார் சுழியேடு நிற்க்கிறது.

இருந்தாலும் வார கடைசி இருக்குல்லா!!!நாங்க அப்ப வருவோம்ல என்று எல்லாரும் அடங்கினார்.விரைவில் ஒரு கதை எழுதும் அபாயம் இருக்கிறது.

நேசத்தின் சுவாசத்தில்...சரா...

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு