நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006

&postur l=http://naadoodisaraa.blogspot.com/2006/08/blog-post_08.html&cmt=0&blogurl=http://naadoodisaraa.blogspot.com/&photo=< $BlogOwnerPhotoUrl$>">

உள்ளம் கேட்குமே மோர்...

உள்ளம் கேட்குமே மோர்...

பெப்சி - கோக் தேவையா....

தேவை:காரணங்கள்
1.வயிற்றில் புழு பூச்சி அண்டாமல் இருக்க


2.சிறந்த முறையில் கக்கூஸ் கழுவ

3.நாங்களும் உலக தரத்திற்க்கு குடிக்கிறோம் என்பதை காட்ட.

4.60 காசு பொருள் 10 ரூபாய்க்கு விற்க்கும் முறையை கற்க.

5.க்ரிக்கட் (criket) மாட்ச் நடத்த

6.இலவச பிரிட்ஜ் கடைகளுக்கு தர (இலவச tv குடுத்தால் ஆட்சியே கிடைக்கும் நாடு இது)

7.வெளிநாடு போல கலர்,கலரா விளம்பர போர்டு வச்சு நகரத்தை அழகு படுத்த.

8.அரசியல்வாதிகளுக்கு அதிக கமிசன் கிடைக்க

9.விளம்பரம் மூலம் ஏழை நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிழைப்பு நடத்த.

10.tv சேனல்கள் பிழைக்க...

பெப்சி கோக் விற்பனையை அதிக படுத்த சில ஐடியாக்கள்

1.அதிகமாக குடிக்கும் நபர்களுக்கு - அந்தகால "சர்" பட்டம் போல "பெப்சி கொண்டான்" என்று பட்டம் கொடுக்கலாம்

2.ரேசன் கடையில் அரசு செலவில் இலவச பெப்சி - கோக் கொடுக்கலாம்

3.அதில் கொஞ்சூண்டு போதை மாத்திரை கலந்து டாஸ்மாக்கில் விற்க்கலாம் ( வாட்டர் பாக்கெட். பேப்பர் கப் செலவு மிச்சம்).

4.விளையாட்டு வீரர்கள் சட்டை,பனியன்களில் விளம்பரபடுத்துவதை விட, உடம்பு முழுக்க பச்சை குத்தி நிர்வாணமாக நடக்கவிடலாம்.

5.ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல பெப்சி-கோக் பெயர்களை 1008 தடவை எழுதினால்,திருப்பதியில் எக்ஸ்ட்ரா லட்டு இலவசமாக கொடுக்கலாம்

6.இட்லி சாம்பார்க்கு பதிலாக, இட்லி பெப்சியை நடிகர் நடிகைகள் விட்டு விளம்பரபடுத்தலாம்.(ஹீரோ போடும் ஜட்டியையே தேடி பிடித்து வாங்கி போடும் நம்ம ஊருல ஈசியா விளம்பரம் ஆகும்.)

7.பெப்சி ரசம்,கோக் பிரியாணி, கோக் பிரைடு ரைஸ் போன்ற ஐட்டங்களை லோக்கல் கடைகளில் விற்க சொல்லி ஹோட்டல்களுக்கு ஊக்கதொகை தரலாம்.

8.பெப்சி-கோக் குடிக்க மாட்டேன் என்று சொல்லும் வீணாபோனவர்கள் மீது தண்ணிலாரி ஏற்றி கொன்றுவிட்டு. பெப்சி-கோக் குடிக்காத்தால் சாமிகுத்தம் வந்து செத்ததாக பிரச்சாரம் செய்யலாம்.

9.பிள்ளையார் பால் குடித்ததை போல், பெருமாள் பெப்சி குடித்ததாக மாலை நாளிதழ்களில் செய்தி கொடுக்கலாம்.

10.இதன் சுவையை அறிந்து வேற்றுகிரக வாசிகளின் ராணுவம், தன் எதிரிகளை அழிக்க இதை வாங்கி செல்வதுபோல் ஹாலிவுட் படங்கள் எடுக்கலாம்.

இதெல்லாம் எதுக்கு...இருக்கவே இருக்கு நம்ம வீட்டு மோர்...
எங்க சொல்லுங்க...

உள்ளம் கேட்குமே மோர்...

©மக்கள் நலன் கருதி வெளியிடுபவர்
நாடோடி சரா...

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு