நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

சனி, ஆகஸ்ட் 12, 2006

&postur l=http://naadoodisaraa.blogspot.com/2006/08/blog-post_12.html&cmt=1&blogurl=http://naadoodisaraa.blogspot.com/&photo=< $BlogOwnerPhotoUrl$>">

அய்யா எனக்கொரு உண்மை தெரிஞ்சாவணும்...

இந்த கேள்விகளுக்கு பதில் தெரியலையே....
1. நான் பிறக்குறதுக்கு முன்னாடிலேர்ந்து இருக்குற தெருவுக்கு பேரு - புதுத்தெரு

2. நான் போற அன்றைக்கு மட்டும், ஏன் ரயில்ல இவ்வளவு கூட்டம்.

3. நான் போற பேருந்து நிற்கிற இடத்துல மட்டும் என்னா ஒரு நாத்தமுங்க.

4. படத்துல கதாநாயகன் பத்துபேர கொன்னு போட்டலும், அவன் சாகுறப்ப மட்டும் எதுக்கு சோகமான இசை போடுறாங்க.

5.மைக்கு முன்னாடி மட்டும் எதுக்கு எல்லோரும் நல்லவங்க மாதிரியே பேசுறாங்க.

6.கோயில்ல சிறப்பு தரிசனம் செய்றவங்களுக்கு சாமி சிறப்பு அருளா செய்யும்.

7.மலையாளிகளுக்கு "நீங்க,வாங்க"ன்னு யாரையும் சொல்லதெரியாதா?

8."படிச்சவன்"னா பேண்டு சட்டைதான் போடனுமா?

9.இந்திய அரசியல்வாதிகளுக்கு வெள்ளை உடைதான் எப்ப சட்டம் போட்டாங்க.

10.அரசியல்வாதி கார்ல போறப்போ, எதுக்கு முன்னாடியும் பின்னாடியும் கார் போது.

11.சென்னைக்கு போறப்ப, ராத்திரி பேருந்து போய் நிற்கிற கடை முதலாளிக்கு மனசாட்சியே கிடையாதா?

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

நாடோடி நாடோடி நிறைய
விசயங்க தெரிஞ்சு வைச்சிருக் கிறீங்க.
சந்தோசம்.

1:49 pm  

Post a Comment

<< முகப்பு