நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

திங்கள், ஆகஸ்ட் 14, 2006

&postur l=http://naadoodisaraa.blogspot.com/2006/08/blog-post_14.html&cmt=4&blogurl=http://naadoodisaraa.blogspot.com/&photo=< $BlogOwnerPhotoUrl$>">

கடவுள் வேண்டாம்

அல்லாஹு அக்பர்,
ஆண்டவர் இயேசு,
இமயத்தில் இருக்கும்,
ஈசன்....

உலகெல்லாம் காக்க வந்தனரன்றி
ஊரை கொளுத்தவோ?

எம்மதமும் சம்மதம் என்று
ஏடுகளில் இருந்தால் போதுமோ

ஐயகோ...
ஒன்றும் அறியா மழலைகளை கூட
ஓர் நொடியில் கொன்றிடும்
இந்த கொடிய தீவிரவாத்திற்கு
இழவு வாராதோ....

மதங்களின் பெயரால்மானுடம் அழிவது
மண்ணில் இன்னும் எத்துணை நாளோ!

அல்லா வேண்டாம்,
இயேசு வேண்டாம்,
ஈசனும் வேண்டாம்

எங்களுக்கு மனிதம் போதும்!
எங்களுக்கு மனிதம் போதும்!!

கடவுள் வேண்டாம்

4 மறுமொழிகள்:

Blogger Sivabalan said...

Excellent!! Good One!!

7:12 am  

Blogger தருமி said...

எங்க ஊரு ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டருந்த ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது:
"எனக்கு எம்மதமும் சம்மதமில்லை"

7:23 am  

Anonymous Anonymous said...

மனுசங்க செய்யிற அநியாயத்துக்கு
அவங்கள திட்டுங்க, திருத்துங்க,
அதவிட்டுடு எதுக்கு
கடவுள எதுக்கு துரத்துறீங்க.
அப்படியே கடவுள் போயீட்டாலும்
மனுசங்க வேற எதையாவது
பிடிச்சுகிட்டு வந்து மண்டைய
உடைப்பாங்க, சொல்லீட்டேன்.

2:11 pm  

Blogger Selogan Plast said...

தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

5:07 am  

Post a Comment

<< முகப்பு